முன்னிலை செய்தி

தனிப்பட்டது: புதுப்பிக்கப்பட்ட குழும இணையத்தளம் மூலம் சியபத பினான்ஸின் புதிய டிஜிட்டல் முறைமை

Siyapatha finance enters into a renewed digital phase through an improved corporate website

சியபத பினான்ஸ் பீஎல்சி, சம்பத் வங்கி பீஎல்சி யின் முழுமையாக உரிமம் கொள்ளப்பட்ட ஒரு இணை நிறுவனம் என்ற வகையில், வங்கி அல்லாத நிதித்துறையில் 15 வருடங்களுக்கும் மேற்பட்ட கால அனுபவத்துடன் காலத்திற்கேற்ற புதிய தயாரிப்புக்களையும், தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்து தொடர்ச்சியாக முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் அதேவேளை, தமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது. தொடர்ந்து மாற்றமடைந்து வரும் தற்போதைய வர்த்தக சூழ்நிலையைக் கருத்திற் கொண்டும், தொடர்ச்சியாக தேவைப்பாடு ஏற்பட்டுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையைக் கருத்திற் கொண்டும் தமது வாடிக்கையாளர்களின் தகவல்களையும், நிதித் தீர்வுகளையும் டிஜிட்டல் முறைகள் ஊடாக அடைந்து கொள்ள வேண்டிய தேவைபாட்டை சியபத பினான்ஸ் நன்கு உணர்ந்துள்ளது. இதன் காரணமாக, சியபத பினான்ஸ் தமது குழும இணையத்தளத்தை புதுப்பித்து மிகச் சிறந்த வடிவமைப்புடன் தமது வாடிக்கையாளர்களின் தகவல்களை டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட சிறந்ததொரு பயன்பாட்டு முறையின் மூலம் அடைந்து கொள்ளக்கூடிய வகையில் தமது இணையத்தளத்தை விஸ்தரிப்புச் செய்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகளிலும் பயன்படுத்தக்கூடிய இந்தப் புதிய இணையத்தளமானது, அனைத்து விதமான புதிய இணைய உலாவிகள் (Browsers) மூலமும் செயற்படக்கூடியதாகும். இது, பாவனையாளருக்கு இலகுவான முறையில் தகவல்களை அடைந்து கொள்ளக்கூடிய வசதியை கொண்டுள்ளது. சியபத பினான்ஸ் பெற்றுக்கொடுக்கும் அனைத்து நிதித் தீர்வுகளையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ளக்கூடிய வகையிலான வசதிகளை இந்தப் புதிய இணையத்தளம் கொண்டுள்ளதோடு, பாவனையாளர்களின் வசதிகளை அதிகரிக்கக்கூடிய மேலும் பல அம்சங்களையும் இந்தப் புதிய இணையத்தளம் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகளை நன்கு விளங்கி உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையத்தளம், அவர்களின் கேள்விகளைச் சமர்ப்பித்தல், வாகன விற்பனைத் தகவல்கள், கல்குலேட்டர்கள், கிளைகளின் தொடர்பு விபரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கக்கூடிய ஏனைய தகவல்கள் ஆகிய பல்வேறு விடயங்களையும் சுமந்து வருகிறது. மேலும், செயற்கை அறிவுடன் செயற்படும் “Live Chat” என்ற முறைமை ஊடாக வாடிக்கையாளர்களுக்கு இணையத்தளத்தில், தான் அடைந்துகொள்ள வேண்டிய இடத்தை இலகுவாகச் சென்றடையும் வசதியும் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய டிஜிட்டல் இணையத்தள மேம்பாடு தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சியபத பினான்ஸ் பிஎல்சி யின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன, தற்போது நிலவி வரும் பயணத் தடைகள், கட்டுப்பாடுகள் காரணமாக எமது வாடிக்கையாளர்கள் முகம் கொடுக்கும் எண்ணிலடங்காப் பிரச்சினைகளின் தாக்கத்தை நாம் நன்கு அறிவோம். அது அவர்களின் வாழ்க்கையில் பல தாக்கங்களை உருவாக்குவதையும் நாம் நன்கு உணர்ந்துள்ளோம். இதற்குத் தீர்வாக அவர்களுக்குத் தேவையான தகவல்களை டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தீர்வு ஒன்றின் மூலம் பெற்றுக் கொடுப்பது மிகச் சிறந்ததாக அமையும். அதனையே நாம் எமது சேவைகளை மிகச் சிறப்பாக பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த இணையத்தளத்தை மீளமைப்பதன் பிரதான நோக்கம், வாடிக்கையாளர்கள் தகவல்களை இலகுவாக அறிந்து கொள்ளக்கூடிய முறையில் அதனை மீள் நிர்மாணம் செய்வதாகும். வாடிக்கையாளர்களை முன்கொண்டு செயற்படும் ஒரு மனப்பாங்குடன் இயங்கி வரும் ஒரு நிறுவனம் என்ற ரீதியில், சியபத பினான்ஸ், தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை காலத்திற்குக் காலம் அறிந்து, அதற்கு ஏற்ற வகையில், தேவையான வளர்ச்சிப் பாதையில் நிறுவனமும் சென்று கொண்டிருக்கிறது’ என்று கூறினார். நம்பகத்தன்மை, திறந்த தன்மை, நம்பிக்கை, ஒற்றுமை, சிறந்த சேவை ஆகிய பல்வேறு முக்கிய அம்சங்களுடன் செயற்பட்டு வரும் ஒரு நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, மிகப் புதிய மற்றும் நம்பகமான நிதித் தீர்வுகளை தமது வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுக்கொடுத்து வருகிறது. மிகச் சிறந்த தொழில் ஆற்றல் கொண்ட சிரேஷ்ட அதிகாரிகள் குழுமம் ஒன்றினால் வழிநடத்தப்பட்டு வரும் சியபத பினான்ஸ் பிஎல்சி, வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், நெகிழ்வான ஆக்கபூர்வமான தீர்வுகளை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் ஆர்வமுள்ள அனைவருக்கும் பெறுமதி சேர்க்கக்கூடிய வகையில் செயற்பட்டு வருவதோடு, குழும ஆளுமையையும் அவ்வாறே பேணி வருகிறது. புதிய இணையத்தளம் ஊடாக, சியபத பினான்ஸ் பிஎல்சி தமது வாடிக்கையாளர்களுக்கு தேவையான தகல்களை இலகுவாக அவர்களின் தேவைப்பாடுகளை முன்நோக்கி அதேவேளை, சுகாதாரப் பாதுகாப்புகளைப் பேணிப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும், நாட்டில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கு சிறந்ததொரு தீர்வாகவும் அமைந்திருக்கும் என்பதில் பூரண நம்பிக்கை கொண்டுள்ளது.